Saturday 2 September 2017

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851

பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் உறைதலை தடுக்கவும், ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து சீரான ரத்த ஓட்டத்தை தொடரவும் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுவது ஆஸ்பிரின் மாத்திரை. அப்படியாக கொடுக்கப்படும் ஆஸ்பிரின் வகை மருந்துகள் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது என்று சில புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அதிலும் குறிப்பாக வயதானவர்கள் இரப்பை மற்றும் அதை சார்ந்த குடல் பகுதிகளில் ரத்தக் கசிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள என தெரியவந்துள்ளது. இதில் கூட்டு மருந்தாக கொடுக்கப்படும் ப்ரோட்டான் பம்ப் இன்ஹிபிடர்ஸ் மற்றும் நெஞ்செரிச்சலுக்காக கொடுக்கும் மருந்துகளோடு ஆஸ்பிரினும் கொடுக்கப்படும் போது ரத்த கசிவு குறைந்து குறிப்பிட்டளவு மாற்றம் ஏற்படுகிறது என்பதும் தெரிய வருகிறது.Risk of bleeds and death with daily aspirin use higher ஒவ்வொரு வருடமும் லண்டனில் மட்டும் சுமார் 20,000பேர் வரை ரத்தக் கசிவினாலும், அதிலும் தோராயமாக சுமார் 3,000 பேர் வரை ரத்தக் கசிவால் இறக்க நேர்ந்துள்ளதாக பல்வேறு வெளிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சில ஆய்வுப்படி இந்த எண்ணிக்கை உண்மையாக இருக்கவேண்டியதில்லை என்றே உணரப்படுகிறது.
இந்த ஆய்வில் இணைந்து செயல்பட்ட பீட்டர் ரூத்வெல் கூறுகையில், ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதால் ஏற்படுவதாக குறிப்பிடப்படும் ரத்தக்கசிவு நோயாளிகளின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவுக்கு மிகைப்படுத்தப்படுகிறது என நான் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனாலும் அந்த தகவல்கள் வெளி உலகத்துக்கு சரியாக போய்சேரவில்லை.Risk of bleeds and death with daily aspirin use higher இந்த தகவல் உரிய இடங்களுக்கு சென்றடையாதது என் குற்றமல்ல ஆனாலும் பத்திரிக்கையாளர்களையும் குறை சொல்லமாட்டேன்,இதை தகவல் பரிமாற்றத்தின் குற்றமாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம் என்றார் லண்டனில் ரூத்வெல். அவரது குழுவினர் டாக்டர்களால் பரிந்துரைத்த ஆஸ்பிரினை தினமும் எடுத்துக்கொள்ளும் போது, பக்கவாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட 3116 பேரை பின் தொடர்ந்து கவனித்ததில் ஒரு நிலைக்குப்பின் சுமார் 314 நோயாளிகள் ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இது கண்காணித்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 10 % ஆகும். அதிலும் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களே இன் நோயால் அதிகம் பாதிப்படைகின்றனர் என கண்டறியப்பட்டது. இதில் 65 வயதுக்குட்பட்டோர் 0.5% என்ற ஆபத்து நிலையிலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2.5 %என்ற ஆபத்து நிலையிலும் இருப்பது கண்டறியப்பட்டது.Risk of bleeds and death with daily aspirin use higher ஆஸ்பிரின் மற்றும் அது தொடர்புடைய மருந்துகள் இதய அடைப்புகளால் வரும் மாரடைப்பு மற்றும் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளால் வரும் பக்கவாதம் போன்றவற்றை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்தை நடுநிலை கொண்டு கவனித்தால் இம்மருந்தை பயன்படுத்தும்போது ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு இதய தமனிகளுக்கு சீராக ரத்த ஓட்டம் ஏற்பட வழிவகை செய்கிறது அதே சமயம் ரத்தம் உறைதல் தடுக்கப்படுவதால் எதிர்பாராவிதமாக ரத்தக் கசிவு ஏற்படும் போது உடனடியாக அதை நிறுத்துவதில் சிரம நிலை ஏற்படுகிறது.
அப்பொழுதும் ரூத்வெல் பிடிவாதமாக மாரடைப்பை விட ரத்தக்கசிவு ஆபத்து குறைவு என்ற வகையில் ஆஸ்பிரினை தொடர்ந்து எடுத்துக்கொள்வதில் தவறில்லை என குறிப்பிடுகிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில் மாரடைப்பு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 75 வயதிற்குற்பட்டவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆஸ்பிரின் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறார்.மேலும் ஆய்வுகளின் படி ஆஸ்பிரினோடு கூட்டு மருந்தாக எடுத்துக்கொள்ளும் ப்ரோட்டான் பம்ப் இன்ஹிபிடர்ஸ் (ppi)ரத்தக்கசிவை வெகுவாக குறைக்கும் தன்மைகொண்டது என்பதையும் முக்கியமாக குறிப்பிடுகிறார்.Risk of bleeds and death with daily aspirin use higher மேலும் இந்த ஆய்வை ஒத்துக்கொள்ளும் ஷெபீல்டு யுனிவர்சிட்டியை சேர்ந்த டாக்டர் சிம் "புற்றுநோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும் நோக்கோடு முன்கூட்டியே இந்த ஆஸ்பிரின் மருந்தை எடுத்துகொள்பவர்கள் தயவுசெய்து தங்களது டாக்டர்களிடம் போய் ஆலோசனை பெற்று மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என பரிந்துரைக்கிறார்.
ஏனெனில், ரத்தம் உறையாததற்கான சிகிச்சை முறையிலும் ஆபத்து அதிகம் என்கிறார். இந்த பின்விளைவுகள் பெரும்பாலும் வயதானவர்களுக்கும் மிகவும் வயதானவர்களுக்கு மட்டும்தான் எனும் போது மற்ற நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. மேலும் ரத்த கசிவுக்கும் ஆஸ்பிரினுக்குமான தொடர்பை கவனித்த ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் யூன் லோக் "இது தவிர்க்க முடியாத அதே சமயம் வேறுவழியே இல்லாமல் வரவேற்கவேண்டிய மருத்துவ சிகிச்சை முறை" என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில் "மாரடைப்பு, பக்கவாதம் வந்தவர்கள் மறுபடியும் அதுபோல் வராமலிருக்க ஆஸ்பிரின் எடுத்துக்கொளும்போது குடல் சார்ந்த ஏற்படும் சிறிய ரத்தக்கசிவை பெரிது படுத்தாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்கிறோம் என்ற பெரிய நன்மையையே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்" என்றார். மேலும், ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் "பக்கவாதம் மற்றும் மாரடைப்பிற்கு பின் ஆஸ்பிரின் மிகச்சிறந்த மருந்து ஆனாலும் ரத்தக்கசிவு போன்ற அதன் பக்க விளைவுகளை சந்தித்துத்தான் ஆகவேண்டும்" என்றார்.

எப்போதும் சோர்வை உணர்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களும் பெண்களும் உடலில் ஆற்றல் இல்லாமல் சோர்ந்த நிலையில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் இன்றைய வாழ்க்கை முறை. நடமாட்டம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் உலகமாக இந்த உலகம் மாறிவிட்டது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் பல்ப், மொபைல் போன், கேட்ஜெட்டுகள் போன்றவை இல்லாததால் சரியான நேரத்திற்கு தூங்கி எழுந்து வேலை பார்த்து வந்தனர். அதனாலேயே நன்கு ஆரோக்கியமாகவும் இருந்தனர்.

ஆனால், இந்த காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மொபைல் போன் மற்றும் கேட்ஜெட்டுகளை உபயோகிப்பது பழகி விட்டது. அவை இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்னும் நிலை ஏற்பட்டுவிட்டு விட்டதால் தூக்கம் இல்லாமல் உடல் நிலை பாதித்து சோர்ந்து காணப்படுகின்றனர்.

ஒரு மனிதனுக்கு முறையாக 7 மணி நேரம் சரியான தூக்கம் இருந்தாலேயே நல்ல ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படி 7 முதல் 9 ணி நேரம் தூங்கி எழுந்தாலும் சிலர் சோர்வாக தான் காணப்படுகிறார்கள். இவ்வாறு ஏற்படுவதற்கு அந்த 7 மணி நேரத் தூக்கம் முறையான தூக்கமாக இல்லாதது காரணமாக இருக்கலாம். அப்படி சோர்வாக உணர்வதற்கான 4 முக்கிய காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாருங்கள்...

Here is the reasons why you are always tired உடல் உழைப்பின்றி இருப்பது
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் கணினி சம்மந்தப்பட்ட வேலைகளை பார்ப்பதால் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலை இருக்கிறது. இதற்காக தினமும் 1000 படிகள் ஏறி இறங்குவது, நிறைய தூரம் நடப்பது என்றெல்லாமல் தேவை இல்லை. நிறைய நேரம் உட்கார்ந்திருப்பது உடலில் சோர்வினையும், மூட்டு எலும்புகளில் வலியையும், இடுப்பு வலியையும், நாள்ப்பட்ட தலைவலியையும் ஏற்படுத்தக்கூடும். இது ஆரோக்கியமான வாழ்நாளை குறைத்துவிடும். இவற்றிற்கு வழி என்னவென்றால், நிறைய நேரம்உட்கார்ந்திருக்கும் தருணத்தில் சிறிது நேரம் எழுந்து நடப்பது, அதாவது, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து 10 நிமிடம் நடக்கலாம், மாடிப்படி ஏறி இறங்கலாம், அருகில் இருப்பவருடன் நடந்து கொண்டே சிறிது பேசலாம். இவை எல்லாம் நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யக்கூடும்.
முறையற்ற உணவு பழக்கம்
சர்க்கரை அதிகமுள்ள உணவுகள், சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால் அதை முதலில் விடுங்கள். இதுவே உடலுக்கு முறையான தூக்கத்தை தரக்கூடியது. ஒரு வேலை நீங்கள் அனைத்து உணவு வகைகளையும் முறையாகவும் சரியாகவும் எடுத்துக்கொண்டாலும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று அர்த்தம். அந்த தருணங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.Here is the reasons why you are always tired தரமற்ற தூக்கம்
பெரும்பாலோர் 7 முதல் 9 மணி நேரங்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள். இருப்பினும் அவர்கள் காலையில் எழும்போது சோர்வாகவும், மந்தமாகவும் உணர்கிறார்கள். இதற்குக் காரணம் தூக்க சுழற்சி சரியாக இல்லாதது. ஒரு வழக்கமான தூக்க சுழற்சியை 75 முதல் 90 நிமிடங்கள் வரை REM மற்றும் REM இல்லாத தூக்கம் மற்றும் பிற நிலைகள் இடையே அமையும். இந்த நிலைகளில் ஒவ்வொன்றும் உங்கள் உடலை புதுப்பித்துக்கொள்வதற்கு மற்றும் நச்சுத்தன்மையை நீக்க உதவுவதற்காகவும் செயல்படக்கூடியது. தரமற்ற தூக்கத்திற்கு முக்கிய காரணங்கள் மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவு பழக்கம், நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது, ஆல்கஹால் குடிப்பது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரவில் அதிக நேரம் வெளிச்சத்தில் இருப்பது போன்றவை.
இவற்றில் இருப்பது தப்பிக்க அதிகாலை சூரிய வெளிச்சம் உடலில் பட செய்வது, மதிய வேலையில் காஃபின் அளவு சேர்ப்பதை குறைப்பது, எலெக்ட்ரிக் உபகரணங்கள் உபயோகிப்பதை தவிர்ப்பது, புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.Here is the reasons why you are always tired மன அழுத்தம்
வேலையிலும், தொழிலும், எதிர் காலத்திலும் அதிக அக்கறை செலுத்தி உடலை கவனித்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் பலரை பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்டவர்களை பார்க்கும போது நீங்களே தெரிந்துக்கொள்ளலாம் அவர்களின் தூக்கம் கெட்டு உடல் சற்று சோர்வாகவே காணப்படும். தூக்கத்தை கெடுத்துக்கொண்டு தொழிலை கவனிப்பதால் கிடைக்கும் பலன் மனஅழுத்ததின்ல் உருவான உடல் சோர்வு. இந்த காலத்து ஆண்களும பெண்களும் பெரும்பாலும் மருத்துவரை அணுகுவது மப அழுத்தத்தை சரி செய்வதற்காக மட்டுமே. இவற்றை போக்கும் வழியாக அமைவது தியானம், யோகா, மசாஜ் மற்றும் இயற்கை காற்றில் நடமாடுவது போன்வறை. மேலும், மொபைல் போனை சற்று தொலைவில் வைத்துவிடுங்கள்.

புகைப் பழக்கத்தை முற்றிலும் மறக்கச் செய்யும் 3 அற்புத மூலிகை பொருட்கள்!!

புகை பிடித்தல், விளையாட்டாக வாலிபப் பருவத்தில் வந்து, வினையாக வாழ்வை அழிக்கக் கூடியது. இளைய வயதில் ஸ்டைலுக்காக, நண்பர்களின் வற்புறுத்தலால், வரும் இந்தப் பழக்கம் பின் எந்தக் காரணமும் இன்றி புகைக்க வைத்து அடிமையாக்கும்.
சிலரோ நடுத்தர வயதில் வரும் குடும்பச் சுமைகளின் காரணமாக வரும் மனச் சோர்வுக்கு புகைத்தலே, ஆறுதல் என்று இருப்பர்.
காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும்வரை, புகைப் பழக்கமே, துணையாக வாழும் எண்ணற்றோர் இங்கே, உண்டு.How to quit smoking without medication
அரசு ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் எந்தப் பொருட்களின் விலையை உயர்த்துகிறதோ இல்லையோ, நிச்சயம் புகையிலை சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்தி விடும். ஆயினும், எந்த விலையானாலும் என்ன என்று வாங்கிப் புகைக்கும் புகைஞர்கள் இருக்கையில், அரசுக்கும் அதிக வரி வருவாய் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களும் கொள்ளை லாபங்களில் கொழிக்கின்றன.மீண்டு வர :

மீண்டு வர :

புகை பிடித்தலை, நிறுத்துவது என்பதும் புகை பிடித்தலை விலக்குவது என்பதும் வேறு வேறு. நண்பர்களிடம் பழகிக் கொண்டிருக்கிறீர்கள் அவர்களில் ஒருவர் நடவடிக்கை உங்களுக்குப் பிடிக்கவில்லை, விலகி விடுகிறீர்கள், மீண்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வமோ அல்லது அவர்களிடம் மீண்டும் உரையாட வேண்டும் என்ற எண்ணமோ தேவையோ உங்கள் மனதில் துளி அளவும் இல்லை, இத்தனைக்கும் அவர் உங்களுடன் நல்ல நட்பில் இருந்தவர்தான், ஆயினும் என்ன, அவரின் இன்றைய செயல்கள் யாவும் தீதென உங்களுக்குத் தோன்றி, நீங்கள் விலகி விட்டீர்கள்.
மனதில் உறுதியோடு இருக்கிறீர்கள், அவ்வளவுதான், இனி அவரை எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நேரலாம், ஆயினும் என்ன, உங்கள் மன உறுதியினால், நீங்கள் அவரை சந்தித்தாலும், முகமன் கூறிவிட்டு விலகி விடுவீர்கள், இதுதானே, நடக்கும், நல்லது. அவ்வளவுதான், இதற்கு மிக்க மன உறுதி மட்டும் தேவை, இப்போது, புகை அரக்கனை முதலில், விலக்க ஒரு புறக் காரணியை துணை கொள்வோம். சூரிய காந்தி விதைகள்:

சூரிய காந்தி விதைகள்:

சூரிய காந்தி மலர்கள், சூரியனை நோக்கி மலரும் பூக்கள், நல்ல மருத்துவ பலன்கள் கொண்ட இந்த மலர்களின் விதைகளே நமக்கு, மிகப்பெரும் அளவில் நன்மை பயக்க வல்லது.
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட சூரிய காந்தி விதைகளே, நெடுநாளாக இருந்த புகைப் பழக்கத்தை வெல்ல உறுதுணையாகும். சூரியகாந்தி விதைகளை வாயில் போட்டு மென்று வர, சிறிது சிறிதாக, புகை மேல் உள்ள நாட்டம் குறையும்.உலர் திராட்சை :

உலர் திராட்சை :

பிறகு, உலர் திராட்சை அதே போல வாயில்; இட்டு மென்று வர, புகை மெல்ல விலகும்.குப்பை மேனி :

குப்பை மேனி :

இந்தப் புகையிலிருந்து முற்றிலும் விலகி வருவதற்கு. குப்பைமேனி மிளகு கலவை காலையில் சாப்பிட்டு வரலாம், மஞ்சள் மற்றும் வேப்பிலை சில நாட்கள் சாப்பிட்டு வர, உடலில் புத்துணர்வு தோன்றும்.
மன உறுதியைத் தளரவிடாமல் எண்ணிய எண்ணத்தில் உறுதியாக இருக்க குப்பைமேனி போன்ற மகா மூலிகைகள் எல்லாம் நல்ல உதவிகள் செய்யும்.
அட்டையாய் ஒட்டிக்கொண்டு, உங்கள் உடல் நலம் மற்றும் பொருளாதார நலம் பாதித்து, மேலும் உறவுகளில், சமூகத்தில் இருந்து உங்களைத் தனிமைப்படுத்திய அந்த புகை அரக்கனிடமிருந்து மனதின் ஆற்றலால் உறுதியால் முழுமையாக விலகி, புது வாழ்வு வாழலாம்.

காலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய 5 எளிய யோகாசனங்கள் எவை தெரியுமா?

யோகா என்பது நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைக்கும் பயிற்சி ஆகும். ஆனால் காலம் நேரமும் ஓடும் இவ்வாழ்க்கையில் யோகா பயிற்சி என்பது இப்பொழுது எல்லாம் கைவிடப்பட்டுள்ளது.
நீங்கள் காலையில் எழுந்து உங்கள் சோம்பல் தனத்தையும் மீறி யோகா செய்வதற்கென உடை அணிந்து அதை மேற்கொள்ளுவது கடினமாக இருக்கிறது அல்லவா? அதற்கு தான் நாங்கள் உங்களுக்கு உதவப் போகிறோம். எல்லாருக்கும் தெரியும் யோகா நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.5 Yoga Poses Before Getting Out Of Bed
ஆனால் அதை எத்தனை பேர் செய்து பலன் பெறுகின்றனர். சில பேர் மதத்தின் அடிப்படையில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளுகின்றன. இன்னும் சில பேர் ஒரு மாதம் காலம் செய்து விட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் கொஞ்ச காலம் தொடர்கின்றனர்.
ஆனால் நீங்கள் காலையில் உங்கள் படுக்கை விரிப்பில் இருந்த படியே இந்த யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். யோகா என்பது வெறும் எடையை மட்டுமே குறைப்பதற்காக செய்வதில்லை. இது ஆஸ்துமா, முதுகுவலி மற்றும் மூச்சு விடுதல் பிரச்சினை போன்ற உடல் சார்ந்த நிறைய பிரச்சினைகளை சரிபண்ணுகிறது.
அப்படிப்பட்ட அற்புதமான பலனை தரும் சில யோகா பயிற்சிகளை இக்கட்டுரையில் காண்போம்.. 1 நடராஜாசனா (நடனமாடும் நிலை) :

1 நடராஜாசனா (நடனமாடும் நிலை) :

நட-நடனம், ராஜா - அரசன், ஆசனம் - யோகா என்று பொருள். இது ஒரு சிறந்த ஆசனம். இந்த ஆசனம் தண்டுவடத்திற்கு வலிமையும் நெகிழ்வுத்தன்மையும் தருகிறது. மேலும் சீரண மண்டலத்திற்கு உதவி புரிந்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. எனவே இதுவே நீங்கள் முதலில் செய்ய வேண்டிய ஆசனமாகும்.
செய்முறை :
தரை விரிப்பில் முதுகுப்பகுதி தரையில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது உங்கள் வலது முழங்காலை மடக்கி இடது முழங்காலின் மேல் வைக்க வேண்டும். வலது பாதம் சற்று வெளிப்புறமாக இருக்குமாறு வைக்க வேண்டும். பக்கவாட்டில் கைகளை தோள்பட்டையின் உயரத்திற்கு சமமாக நீட்ட வேண்டும்.
மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். மூச்சை வெளியே விடும் போது தோள்பட்டை மற்றும் இடுப்புக்கு இடைப்பட்ட பகுதியை அப்படியே இடது புறம் திருப்பி மற்றும் தலையை வலது பக்கம் திருப்பி வலது தோள்பட்டையை பார்க்க வேண்டும்.
தோள்பட்டை களை தரையில் படும்படி செய்து பின்னர் வலது தொடையை தரையில் படும்படி செய்ய வேண்டும். மேலும் இடது கையை வலது தொடையின் மீது வைத்து கீழே படும் படி செய்ய வேண்டும்.
இதே நிலையில் 3-4 மூச்சுப்பயிற்சி அல்லது உங்களால் முடிகின்ற அளவு வரை செய்ய வேண்டும்.
பிறகு மூச்சை வெளியிட்டு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளுங்கள்.
இதே பயிற்சியை அடுத்த பக்கம் மாற்றி செய்யவும்.
பயன்கள் :
தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மையும் வலிமையையும் அதிகரிக்கிறது.
இது விலா எலும்புகள் மற்றும் நுரையீரலுக்கு நல்ல பயிற்சியாகும்.
இது பெருங்குடல் செயலை நன்றாக்குகிறது. எனவே இதை காலையில் செய்தால் நல்லது.
குடலியக்கம், சிறுநீர்ப் பை போன்றவற்றின் செயலை சீராக்குகிறது.
சீரண சக்தியை மேம்படுத்துகிறது
மனது மற்றும் மூளையை ரிலாக்ஸ் ஆக்குகிறது. சுஹாசனா (குறுக்கு கால் போடும் நிலை) :

சுஹாசனா (குறுக்கு கால் போடும் நிலை) :

இது ஒரு எளிதாக செய்யும் யோகா ஆகும். உங்களது படுக்கையில் உட்கார்ந்து கொண்டு குறுக்கு கால் போட்டு செய்யும் ஒரு எளிய நிலை ஆகும். சுஹா என்றால் சந்தோஷம் என்று பொருள்.
செய்முறை :
முதலில் உங்கள் கால்களின் கோணங்கள் சரியாக இருக்குமாறு குறுக்கு கால் போட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
மெல்ல கண்களை மூடிக் கொண்டு காற்றில் கேட்கும் இசையை போல உங்களது மூச்சை மெதுவாக இழுக்க வேண்டும்.
மூச்சை நீங்கள் உள்ளே இழுத்தல் உங்கள் தண்டுவட நீட்சிக்கும், வெளியிடுதல் தண்டுவடம் ரிலாக்ஸ் ஆவதற்கும் உதவுகிறது.
20 தடவை மூச்சை இழுத்து வெளியிடுவதை செய்ய
பயன்கள் :
உங்களது இடுப்பு எலும்புகள் நெகிழ்வுத்தன்மை பெறுகிறது
தண்டுவடம் நீட்சியடைகிறது
இதை தினமும் காலையில் செய்தால் உங்களது மனஅழுத்தம் குறைந்து அமைதி மற்றும் சந்தோஷம் மனதில் ஏற்படும்.3.பிரணயாமா(மாற்று மூச்சுப்பயிற்சி) :

3.பிரணயாமா(மாற்று மூச்சுப்பயிற்சி) :

தரை விரிப்பில் அமைதியாக உட்கார்ந்து நீங்கள் மூச்சு விடுதலை கவனியுங்கள். 5 நிமிடங்கள் இயற்கையான காற்றை சுவாசித்து மெதுவாக மூச்சு விடுங்கள்.
கெயன் முத்திரையில் உட்கார வேண்டும். அதாவது வலது அல்லது இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலானது பெருவிரலை தொடும் படி வைத்து மற்ற விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். (படத்தை பார்த்தால் நன்றாக புரியும்).
இந்த ஆசனம் செய்யும் போது மூச்சை மெதுவாக இரு மூக்குத்துவாரங்கள் வழியாக இழுத்து ஒரு மூக்குத்துவாரங்கள் வழியாக வெளியே விட வேண்டும்.
ஒரு துவாரத்தை பெருவிரல் அல்லது மோதிர விரலால் மூடிக் கொள்ள வேண்டும். மூச்சை ஒவ்வொரு துவாரம் வழியாக மாற்றி மாற்றி விட வேண்டும்
வலது துவாரம் வழியாக மூச்சை இழுத்து அதற்கு இடது துவாரம் வழியாக வெளியிட வேண்டும். இதற்கு பெருவிரல் அல்லது மோதிர விரலால் மூடிக் கொண்டு செய்ய வேண்டும்.
இதையே 5 நிமிடங்கள் செய்ய வேண்டும். எந்த மூக்குத்துவாரங்கள் வழியாக முதலில் மூச்சை வெளியே விட்டமோ அதே துவாரம் வழியாக வெளியிடும் வரை செய்து விட்டு ஆசனத்தை முடித்துக் கொள்ளலாம்.
பயன்கள் :
நுரையீரலின் காற்றின் கொள்ளளவை அதிகரிக்கிறது.
உடலுக்கு தேவையான விழப்புணர்ச்சியை உண்டாக்குகிறது.
மூளையில் சுரக்கும் வலது மற்றும் இடது ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்ய உதவுகிறது.
உடல் வெப்பநிலையை சீராக்குகிறது. 4.குழந்தை நிலை (பாலாசனம்) :

4.குழந்தை நிலை (பாலாசனம்) :

இந்த ஆசனம் நமது ஒட்டுமொத்த உடலையும் மனஅழுத்தத்திலிருந்து பாதுகாத்து மன அமைதியை தருகிறது.
செய்முறை :
தலையை படுக்கை விரிப்பில் வைத்துக் கொண்டு நன்றாக குனிந்து முழங்கால் போட்டு காலின் மேலே உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
கைகளை நேராக முன்னே நீட்டிக் கொள்ள வேண்டும். உங்களது நெற்றி குனிந்து தரையை தொட வேண்டும்.
மூச்சை உள்ளே வெளியே மெதுவாக இழுத்து விட வேண்டும். உங்கள் மனதை இது அமைதி படுத்தும்
கொஞ்சம் நேரம் இதே நிலையில் இருக்க வேண்டும்.
பயன்கள் :
மூச்சுப்பயிற்சியை நன்றாக்குகிறது
தண்டுவட நரம்புக்கு விரவு கொடுக்கிறது. மற்றும் நரம்புகளுக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது.
உள் உறுப்புகளான அடிவயிறு, சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றிற்கு நல்ல மசாஜ் கொடுத்து நன்றாக அவைகள் வேலை செய்ய உதவுகிறது. பாம்பு போன்ற நிலை (புஜங்ஹாசனம்) :

பாம்பு போன்ற நிலை (புஜங்ஹாசனம்) :

இது மிகவும் எளிதான யோகா ஆகும். பின் பகுதியை வளைத்து ரொம்ப கடினமாக இல்லாமல் மெதுவாக மேலே தலையை தூக்கும் நிலை ஆகும். இந்த ஆசனம் உங்களுக்கு காலையில் மன அமைதியையும் நல்ல புத்துணர்வையும் தரும்.
செய்முறை :
தரை விரிப்பில் குப்புற படுத்துக் கொண்டு தலையை மேலே தூக்கி கைகளை முன்புறமாக ஊன்றிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மூச்சை இழுத்து வெளியே விட வேண்டும்.
கால்கள் மற்றும் தொப்புள் பகுதி போன்றவை தரையில் பதிந்து அப்படியே மெல்ல மெல்ல முதுகை வளைத்து கைகளை ரொம்பவும் தூக்காமல் லேசாக செய்ய வேண்டும்.
பிறகு தலையை மேலே உயர்த்தி முதுகுப்புறமாக வளைத்து கண்கள் மேல் விட்டத்தை பார்க்க வேண்டும். கீழே இறங்கும் போது மெதுவாக மூச்சை எடுத்துக் கொண்டே இறங்க வேண்டும்.
15-30 விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும்.
பயன்கள் :
தண்டுவடத்திற்கு வலிமை கொடுக்கிறது
கைகள், முன்னங்கைகள், தோள்பட்டை, மணிக்கட்டு போன்றவை வலுப் பெறும்
இதயம் மற்றும் நுரையீரல் வேலையை அதிகரிக்கிறது.
சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது
சியாட்டிகா போன்ற நோயை சரிபண்ணுகிறது.
பின்பகுதியை நிலைப்படுத்தி வலுமையாக்குகிறது.
என்னங்க இந்த ஆசனங்களை உங்கள் காலைப் பொழுதில் செய்து உடல் ஆரோக்கியத்தோடு மன ஆரோக்கியத்தையும் பெறுங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் டூத் ப்ரஷ் உங்கள் ஆரோக்கியத்தை எப்படி மோசமாக்கும் என தெரியுமா?

பெரும்பாலும் 90 சதவிகித பேர், காலையில் பல் துலக்கும் பழக்கத்தை தினசரி வைத்திருக்கிறார்கள். ஏனெனில், இதனால் நாம் மிக ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, நாம் பின்தொடரவேண்டிய தேவையான ஒரு பழக்கமாகவும் இது அமைகிறது.
இன்றைய உலகில், தினசரி நம் பற்களை துலக்குவதால் நம் தனிப்பட்ட சுகாதாரமானது மேம்படுகிறது என்பதனை உணர்ந்திருக்கிறோம் என்பதே உண்மை. அத்துடன் பல் இடுக்குகளையும் இது பாதுகாக்கிறது என்பதையும் நாம் அறிகிறோம்.This Is How Your Toothbrush Can Be Very Dangerous For Your Health!
நீங்கள் தினசரி ஒரு முறையாவது உங்கள் பற்களை துலக்குவதில்லை என்றால்... இதனால், உங்கள் பற்களில் கறைகள் படிய வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. அத்துடன் பற்களின் இடுக்கில் சீமை சுண்ணாம்பு போன்ற பொருளும் சேர்கிறது. இதற்கு முக்கிய காரணமாக, நாம் உண்ணும் உணவின் தேக்கங்கள் சென்று பற்களின் இடுக்கில் சேருவதனாலே என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன், சுகாதாரமற்ற பற்களால் நிறைய பேருக்கு இதய நோய்கள் கூட உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஆம், நம் வாயில் இருக்கும் பேக்டீரியாவானது, இதயத்தை நோக்கி இரத்தம் மூலம் நகர்ந்து செல்கிறது.
பழங்காலத்தில், அனைவரும் தங்கள் பற்களை பாதுகாக்க  வேப்பங்குச்சியை பயன்படுத்தினார்கள். அவர்கள் பல் துலக்கியவுடன், அந்த பொருளை தூர எறிந்து அடுத்து நாள் மற்றுமோர் (கரிஅல்லது வேப்பங்குச்சி) புதிய பொருளை எடுத்து துலக்குவது வழக்கமாகும்.
ஆனால், இன்றோ...நாம் அனைவரும் அவற்றை விலக்கி, டூத் ப்ரெஷ்ஷின் உதவியுடன் நம் பற்களை சுத்தமாக வைத்துகொள்ள ஆசைகொள்கிறோம்.
உங்களுக்கு தெரியுமா? டூத் ப்ரஷ்ஷை தவறாக உபயோகிப்பதனால், உங்கள் உடல் நலத்திற்கு எவ்வளவு கேடுகள் உண்டாகும் என்பது? அப்படி உண்மை #1:

உண்மை #1:

ஒருவேளை, உங்கள் தோழன், அவன் டூத்ப்ரஷ்ஷை எடுத்துவர மறந்துவிட்டான் என்றால்...ஒருபோதும் உங்கள் டூத்ப்ரஷ்ஷை அவனுக்கு தாரை வார்த்து தந்துவிடாதீர்கள். ஏனென்றால், அவர்கள் வாயில் இருக்கும் நுண்ணுயிரிகள், டூத்ப்ரஷ்ஷிற்கு மிகவேகமாக சென்றுவிட, அதனை நீங்கள் திரும்ப உபயோகிக்கும்பொழுது, பல்வேறு தொற்றுகளால் பாதிக்கப்படுகிறீர்கள்.உண்மை #2:

உண்மை #2:

நீங்கள் பல் துலக்கும்பொழுது, ஒருபோதும் கழிப்பறையை ப்ளஷ் (Flush) செய்யாதீர்கள். பெரும்பாலானோர் காலை நேரங்களில், அவசர அவசரமாக இவ்வாறு செய்வது வழக்கமாகும். ஏனென்றால், நீங்கள் ப்ளஷ் செய்யும்பொழுது, கழிப்பறையில் இருந்து வரும் தண்ணீர் 3 மீட்டர் இடைவேளையில் இருக்கும் டூத்ப்ரஷ்ஷில் பட, அசுத்தமான தண்ணீர் பட்டு, அது உங்கள் ப்ரஷ்ஷில் தங்கிவிடுகிறது.உண்மை #3:

உண்மை #3:

உங்களுடைய டூத்ப்ரஷ் தலையை ஒருபோதும் ப்ளாஸ்டிக் தொப்பி அல்லது திசுபேப்பர் கொண்டு மூடாதிர்கள். ஏனெனில், அந்த டூத்ப்ரஷ் முட்களின் மீது ஈரப்பதம் தங்கிவிட, அது தரையை நோக்கி இனப்பெருக்கம் செய்து தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாவை ஏற்படுத்துகிறது.உண்மை #4:

உண்மை #4:

உங்கள் டூத்ப்ரஷ்ஷை மேற்பரப்பின் படுக்கை வாட்டத்தில் (நிலையில்) வைப்பதை தவிர்க்கவும். இந்த நிலையில் இருக்கும்பொழுது ஈரம் வெகு நேரத்திற்கு டூத்ப்ரஷ்ஷிலே தங்கிவிடுகிறது.
இதனால், பாக்டீரியா வளரவும் செய்கிறது. ஆகையால், உங்கள் டூத்ப்ரஷ்ஷை செங்குத்தான கோணத்தில் உலர்ந்த கப் அல்லது பிடிப்பானில் (Holder) வைக்க வேண்டியது அவசியமாகும்.உண்மை #5:

உண்மை #5:

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, தவறாமல் டூத்ப்ரஷ்ஷை நாம் மாற்ற வேண்டும். நீங்கள் பழைய டூத்ப்ரஷ்ஷை பயன்படுத்தினால்...பல நோய்களும் இதனால் உண்டாகிறது. அதனால், தங்கும் பாக்டீரியாவானது சுத்தப்படுத்த முடியாத நிலைக்கு சென்று நம்மை துன்பத்தில் தள்ளவும் செய்கிறது.

இந்த ஒரே ஒரு ஜூஸ் உங்களுக்கு உண்டாகும் விட்டமின் சி குறைபாட்டை முழுமையாக குணப்படுத்தும்!

உங்கள் உடலின் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறதோ இல்லையோ, ஆரோக்கியமான வாழ்விற்கும், நோய் இல்லாமல் வாழவதற்கும் முறையான உணவு பழக்கம் மிக முக்கியமானது. இந்த உலகில் எந்த ஒரு நோயும் இல்லாமல் யாரும் வாழ முடியாது. ஆனால் ஒரு நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான காரணம் முறையற்ற உணவு பழக்கம் தான். சிலர் சிறிய அளவிளாக நோய்கள் மட்டுமே ஏற்பட்டு தப்பித்து விடுவார்கள். ஆனால், வைட்டமின் குறைபாட்டால் நோய் ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் சாதாரண உடல் வலி, தலைவலி முதல் மிக மோசமான நோய்களான புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு நோயும் வெவ்வேறு பிரச்சனைகளையும், சிகிச்சை முறைகளையும் கொண்டது.This Yummy Drink Can Cure Vitamin C Deficiency Within Days!
ஒரு நோய் எப்போது ஏற்படும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது. ஆனால், நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு சிறிய முயற்சியாக ஆரோக்கியமான முறைகளை கடைபிடிக்கலாமே. நீரிழிவு நோய் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடியாது; ஆனால், சளி, இருமல், உடல் பருமன் போன்றவற்றை நம்மால் சில முறைகளால் தடுக்க முடியும்.
முன்பு கூறியது போல, முறையான ஆரோக்கியமான உணவு முறைகள் எப்போதுமே உடலை ஆரோக்கியமாகவும், உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களையும் சேர்க்கக் கூடியது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள், கொழுப்புச் சத்துக்கள் போன்றவை முக்கியமானவை ஆகும். உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பல பிரச்சனைகள் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கும்.விட்டமின் சி குறைபாடு :

விட்டமின் சி குறைபாடு :

இந்த இயற்கை ஜூஸை தினமும் குடிப்பதனால்இ, வைட்டமின் சி குறைபாட்டினை சரி செய்ய நன்கு உதவும். வைட்டமின் சி குறைபாடு சற்று ஆபத்தானது. ஏனென்றால், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்திவிடும்.மூட்டு வலி :

மூட்டு வலி :

எனவே, வைட்டமின் சி குறைபாடு சாதாரணமாக வைரல் காய்ச்சல், சளி, மூட்டு வலி மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்களுள் ஒன்று வைட்டமின் சி. உங்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருக்கிறது என்று தெரிந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை ஜூஸ் நிச்சயம் உங்களுக்கு உதவும்.தேவையானப் பொருட்கள்

தேவையானப் பொருட்கள்

ஆரஞ்சு ஜூஸ் - 1/2 டம்ளர்
கிவி ஜூஸ் - 1/2 டம்ளர்
மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்ஜூஸ் தயாரிக்கும் முறை

ஜூஸ் தயாரிக்கும் முறை

கொடுக்கப்பட்ட அளவில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு இதைத் தொடர்ந்து குடிக்க வேண்டும்.நன்மைகள் :

நன்மைகள் :

ஆரஞ்சு மற்றும் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. எனவே, இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உடலுக்கு தேவையான சத்துக்களை சேர்த்து ஆரோக்கியமான வைத்துககொள்ள உதவும். மிளகுத தூள் உடலில் வைட்டமின் சி யை ஈர்த்துக்கொள்ள உதவக்கூடியது.

உடல் எடையை குறைக்க நினைக்கும்போது நாம் செய்யும் தவறுகள்

இப்போதைய இளம் வயதினருக்கு தலையாய பிரச்சனையாக இருப்பது அதிகரித்த உடல் எடையை எப்படி குறைப்பது என்று தான். ஆனால், அதற்கென முறையான முயற்சிகளை எடுக்காமல், உண்ணும் உணவின் அளவை குறைத்துவிட்டு, தினமும் நீண்டநேரம் தூங்கினால் எடையை குறைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அதிகமாக நிலவுகிறது.
 
போதுமானா கலோரிகள் அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் நன்கு தூங்கி எழுந்தால் உடல் எடை குறைத்து விடலாம் என தூக்க மாத்திரை போட்டுக்கொண்டும் தூங்கி எழுந்து மரப்பாச்சி பொம்மை போல திரிகின்றனர். இந்தப்போக்கை நிபுர்ணர்கள் எச்சரித்து கொண்டு தான் இருக்கின்றனர்.Easiest ways to lose your weight
ஒரு உணவின் இடத்தை இன்னொரு உணவுதான் நிரப்ப முடியுமே தவிர தூக்க மாத்திரைகளோ மயக்க மாத்திரைகளோ அல்ல. பெண்கள் உணவுக்கு பதில் பசிக்காமல் இருக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தங்களையே வருத்திக்கொள்கிறார்கள். மேலும் சிலர் உண்ண வேண்டிய கலோரி அளவு உணவை உட்கொள்ளாமல் மிக குறைவாக உண்டு தூக்க மாத்திரைகளின் உதவியால் 20 மணிநேரம் வரை தூங்கி எடை குறைப்புக்கு முயல்கின்றனர். இந்த மோசமான போக்கு நார்கோரெக்ஸ்யா (narcorexia) என்றழைக்கப்படுகிறது.Easiest ways to lose your weight உடல் எடை குறைப்புக்கு டாக்டர்கள் வைக்கும் தீர்வு மிக எளிமையானது. அதாவது நல்ல ஆரோக்கிய உணவு, சிறந்த உடற்பயிற்சி, இரவில் நல்ல தூக்கம். இதுதான் டாக்டர்கள் நம் முன் வைக்கும் எடை குறைப்பு திட்டம். டயட் டாக்டர் மைக்கேல் ப்ரீஸால் "தினமும் நான்குமணிநேர எளிய உடற்பயிற்சி ஏழு மணிநேர தூக்கம் இதுவே நல்ல பலனை தரும்" என்கிறார்.
ஆனாலும் இளையதலைமுறையினர் உணவை தவிர்த்து எடையை குறைக்கவே முயல்கின்றனர். இதுபற்றி சன் ஊட்டச்சத்து நிபுணர் அமண்டா உர்செல் இந்த போக்கு அதிர்ச்சிக்குரியது மற்றும் இதை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாததும் கூட என்றார்.
மேலும் அவர் கூறுகையில் “நீங்கள் உங்கள் மனநிலையை கவனமாக கையாண்டாலே போதுமானது. உணவை ஒதுக்கத் தேவையில்லை. நம் உடலின் சக்தியை தக்கவைத்துக்கொள்ள மூன்றுவேளை உணவு அவசியமாகிறது. ஏதாவது ஒருவேளை உணவை நாம் தவிர்த்தாலும் உடலின் சமநிலை தவறுகிறது. அதனால் மனநிலையும் பாதிப்படைகிறது.Easiest ways to lose your weight இப்போக்கு தொடரும்போது உடல் நிலையும் பாதிப்படைய தொடங்குகிறது, சீரான உணவுப் பழக்கம் இல்லாததால் பலர் குறிப்பாக, பெண்கள் தங்களுக்கு இயற்கையாக கிடைக்கவேண்டிய இரும்பு சத்து,சுண்ணாம்பு சத்து மற்றும் புரத சத்துகளை இழந்து நோயாளியாகின்றனர்”என்றார்
பொதுவாக ஒருநாளைக்கு ஐந்து முறை காய்கறி பழங்களை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும், அரிசி, மீன், பருப்பு போன்ற புரதங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும், நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். உணவு உட்கொள்ளாமல் நீண்ட நேரம் உறங்குவதால் எடை குறையும் என்ற பிற்போக்கு தனத்தை கைவிடவேண்டும். இதனால் மனநிலையும் உடல்நிலையும் சீர்குலையும் என்பதை முதலில் உணரவேண்டும்.
இறுதியாக ஒன்றை சொல்லவேண்டுமென்றால் உங்களின் எடை அதிகரிப்புக்கு உணவு பழக்க வழக்கங்கள் மட்டுமே காரணமாக இருக்காது. அது போலவே எடையை குறைப்பதற்கும் உணவு உண்ணாமல் இருந்தாலே போதுமானது என்பதும் தவறான அணுகு முறையாகும்.
எனவே, உடல் எடை அதிகரிப்பதாக கருதினால், அதற்கு தகுந்த டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறுவதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதை விடுத்து நீங்களாகவே பட்டினி கிடந்தது உடம்பை குறைக்க நினைப்பது பல்வேறு பக்க விளைவுகளைத்தான் கொண்டுவந்து சேர்க்கும்.
சுருக்கமாக சொல்வதென்றால் ஓணான் சைஸ் பிரச்னையை டயனோசர் சைசுக்கு பெரிதாக்கி விடாதீர்கள். உடல்நலம் சம்பந்தப்பட்ட தீர்வு டாக்டர்களிடம் தான் இருக்கிறது. அவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதுதான் உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.

வாட்டர் பாட்டிலில் எக்ஸ்பயரி தேதி ஏன் தருகிறார்கள்? தண்ணீர் கெடுமா?

நம் நாட்டில் நிலத்தடி நீர் அல்லது கிணற்று நீர் பயன்படுத்துவது தான் வழக்கத்தில் இருந்து வருகிறது.இந்த நீர் ஆதாரத்தின் வயதை நீங்கள் பார்த்தீங்கள் என்றால் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

நம் பூமி தோன்றிய காலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கு மேல் இங்கு நீர் ஆதாரங்கள் இருந்து வருகின்றனர். ஆனால் நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீருக்கு மட்டும் ஏன் எக்ஸ்பிரி தேதி கொடுக்கப்பட்டுள்ளது என்று யோசித்தீர்களா? ஏனெனில் இதுவரை எந்த ஒரு பாட்டில் பிராண்ட்டும் மக்களின் நம்பிக்கைக்கு நம்பகமான தரமான பொருட்களை ஏற்படுத்த முடிவதில்லை.Does Water Have An Expiry Date?
இங்கே தண்ணீரின் எக்ஸ்பிரி தேதி பற்றிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம்.உண்மை #1

உண்மை #1

தண்ணீர் கெட்டுப் போவது இல்லை. அதை பயன்படுத்தி சமைக்கும் உணவுப் பொருட்கள் தான் கெட்டுப் போகும். உப்பு மற்றும் சர்க்கரை கூட கெட்டுப் போவதில்லை.உண்மை #2

உண்மை #2

அப்போ என்ன காரணத்திற்காக வாட்டர் பாட்டிலில் எக்ஸ்பயரி தேதி கொடுக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கேட்பீங்க. என்னவென்றால் எக்ஸ்பிரி தேதி கெமிக்கல் வினைகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்.
ஏனெனில் பாட்டிலில் இருக்கும் சில கெமிக்கல் பொருட்கள் கொஞ்ச நாள் கழித்து தண்ணீருடன் வினைபுரிய தொடங்கி விடுமாம். .உண்மை#3

உண்மை#3

மற்றொரு காரணம் என்னவென்றால் பாட்டில் கம்பெனிகள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது.ஒரு பொருளை மக்களிடம் விற்பனை செய்ய இந்த விதிமுறைகளின் படி செயல் பட வேண்டும். உண்மை #4

உண்மை #4

நீரில் கலக்கும் கெமிக்கல்கள் தண்ணீருடன் கலந்து விட்டால் அது மாசுபட்டு விட்டது என்று தானே அர்த்தம்.உண்மை #5

உண்மை #5

வேறு சில காரணிகளான வெப்பம், கெமிக்கல்கள், சேமிப்பு பொருட்கள் மற்றும் தொற்றுப் பொருட்கள் போன்றவற்றாலும் தண்ணீரின் தூய்மை கெடுகிறது.
எனவே எக்ஸ்பயரி தேதி கொடுக்கப்பட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் கொடுக்கின்றனர்.
என்னங்க வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் தூய்மை பற்றி தெரிந்து கொண்டீங்களா? இனி அதை பாதுகாப்பாக பயன்படுத்துங்க.

உடல் எடையை குறைக்க ஆரம்பிச்சாச்சா? கார்ப் குறைவான உணவுகள் எப்படி தேர்ந்தெடுப்பது?

உடல் பருமன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட். ஜங் உணவுகள் சாப்பிடுவதால் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் கொழுப்பை சேர்க்க உதவுகிறது. இது உடல் பருமன் அதிகரிப்பதை படிப்படியாக அதிகரிக்கச் செய்கிறது.
கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் வைட்டமின் போன்றவை அன்றாடம் நாம் உணவு உண்ணும் போது உடலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்களாகும். ஆனால், அதற்கும் ஒரு அளவு உண்டு. எவ்வளவு சத்துக்கள் சராசரியாக நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது என்பதை தெரிந்துக் கொண்டு நாம் உணவு உட்கொள்ள வேண்டும்.Want To Maintain Your Weight? Add These Low-carb Foods To Your Diet கார்போஹைட்ரேட் உணவுக் கட்டுப்பாட்டில் முக்கியமான ஒரு சத்தாகும். இதுவே உடலுக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. ஆனால், உடல் எடை குறித்து வரும் போது நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவை கவனிக்க வேண்டும். தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட் எளிமையாதாக இருப்பதால் அவை எளிதில் செரித்து விடும்.
அதுவே, சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிட்டால் அவை உடலில் செரிப்பதற்கு தானதம் ஆகதோடு, உடலில் கொழுப்பை சேர்த்து வைக்க வழு செய்யும். எனவே, கார்போஹைட்ரேட் குறைவான உள்ள உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதை நிச்சயம் குறைக்கலாம்.
இந்தக் கட்டுரையில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றைப் பற்றி பார்ப்போம்..முழு தானியம்

முழு தானியம்

முழு தானியங்கள் தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை நமது உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ், கம்பு, பழுப்பு அரிசி, முதலியன சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், இரும்புச் சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. முழு தானியங்களில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட்டால், நாள் முழுவதுக்குமான சக்தியை தரக்கூடியது.பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்புகளில் அதிகப்படியான புரதச்சத்துக்கள் உள்ளன. இவை கார்போஹைட்ரேட்டுக்கு பதிலாக தாரலமாக உட்கொள்ளலாம். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமல்லாமல் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றை தன்னுள் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இது செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை சமப்படுத்துகிறது. சில முக்கியமான மற்றும் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பருப்பு வகைகள் சுண்டல், சோயா பீன்ஸ், பீன்ஸ் முதலியன.நட்ஸ்

நட்ஸ்

நார்ச்சத்து, ஒமேகா 3, கொழுப்புச் சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின் ஆகிய அனைத்தும் அடங்கிய ஒரே நொறுக்கித் தீனி வகை என்றால் அது நட்ஸ் தான். இதனை சாலட் அல்லது மற்ற உணவுகளின் மீது தூவியும் சாப்பிடலாம். சியா விதைகள், துளசி விதைகள், பாதாம், வால்நட், பூசணி விதை, முந்திரி போன்றவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள்

மண்ணிற்கு மேலே விளைந்த அனைத்து காய்கறிகளையும், அதாவது மாவுச் சத்து இல்லாத உணவுகள் அல்லது கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகள் போன்றவை நல்லது. இந்த வகை உணவுகளை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ தினமும் சாப்பிட்டால் வயிறு நிறைந்த எண்ணம் அதிக நேரம் இருக்கும், அதுவே உடல் பருமன் சரியாக மேற்கொள்ளவும் உதவும். பழங்கள்

பழங்கள்

தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலங்கள் நிறைந்த பழங்களில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை உள்ளன. சிக்கலான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்கு பதிலாக இது போன்ற பழங்கள் சாப்பிடுவது எடை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். இறைச்சி மற்றும் கடல் உணவு

இறைச்சி மற்றும் கடல் உணவு

அசைவப்பிரியர்களுககு இது ஒரு நல்ல செய்தி தான். இறைச்சி மற்றும் கடல் உணவுகளில் உள்ள அதிகப்படியான புரதச்சத்துகள் நிறைந்ததாகவும், கார்போஹைட்ரேட் இல்லாததாகவும் இருக்கிறது. எனவே, கார்போஹைட்ரேட்டிற்கு பதிலாக சாப்பிடக்கூடிய சிறந்த உணவாக விளங்கும் இந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். அதற்கென்று இறைச்சி மற்றும் கடல் உணவுகளை அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. கொழுப்புக் குறைந்த பால் பொருட்கள்

கொழுப்புக் குறைந்த பால் பொருட்கள்

ஒரு பவுல் சீஸ், இனிப்பில்லா பால் அல்லது தயிர் ஆகியவற்றில் வைட்டமின் டி, புரதச்சத்துக்கள் போன்றவை அதிகமாகவே உள்ளது. மேலும், இந்த உணவுகளை சாப்பிட வாங்குவதற்கு முன் அதன் கொழுப்பு அளவினை பார்க்க மறந்துவிடாதீர்கள். அதிகமாக கொழுப்பு உள்ள பொருட்கள் ஆரோக்கிய சீர்க்கேட்டை உருவாக்கிவிடும். எனவே, கொழுப்பு குறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது மிக முக்கியமான ஒன்று. முளைக் கட்டிய தானியங்கள்

முளைக் கட்டிய தானியங்கள்

புரதங்களும் அதிகமான உள்ள ஆரோக்கியமான உணவான முளைக்கட்டிய தானியத்தை தினசரி உணவில் சிறிதாவது சேர்த்துக் கொள்ளவேண்டும். சாலட் அல்லது சான்விட்ஜ் போன்றவற்றில் உருளைக்கிழங்கு போன்றவை சேர்த்து சுவையான உணவாக உட்கொள்ளுவது அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க நட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் என தெரியுமா?

நட்ஸ் அதிகப்படியான கொழுப்புச்சத்துக்களை கொண்டுள்ளது. அதே சமயம் இதில் அதிகப்படியான வைட்டமின்கள், கனிமங்கள், புரதம் மற்றும் நார்சத்துக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இதனை நொறுக்கு தீனியாக சாப்பிடுவது ஆரோக்கியமானது என நினைப்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் சரியான அளவில் கட்டுப்பாடுடன் சாப்பிடுவது அவசியம்.
உடல் எடையை குறைக்கும் சில நட்ஸ் பற்றி பார்ப்போம்.பாதம்:

பாதம்:

பாதாமில் அதிகப்படியான நார்ச்சத்து, வைட்டமின் இ, மெக்னீசியம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைக்க வல்லது. நொறுக்கு தீனியாக எடுத்துக்கொள்ளும் போது உடல் எடையை குறைக்க சிறந்தது. இதில் முக்கியமானது என்னவென்றல் இதனை அளவுடன் எடுத்துக்கொள்ளும் போது இது உடல் எடையை குறைக்கும். ஒருவேளை அதிகப்படியாக எடுத்துக்கொண்டால் இது எதிர்மறையாக உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். 6-7 பாதம்கள் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்வது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.வால்நட்:

வால்நட்:

வால்நட் அதிகப்படியான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உள்ளடக்கியுள்ளது. இது கொழுப்பின் அளவை குறைக்க உதவியாக உள்ளது. மேலும் இது உங்கள் முகத்தை பளபளக்கச் செய்ய உதவியாக உள்ளது.முந்திரி:

முந்திரி:

முந்திரி அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளது. அதே சமயம் வளர்ச்சிதை மாற்ற நோய் அறிகுறிகளை குறைக்க வல்லது. நிறைய முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.வேர்க்கடலை:

வேர்க்கடலை:

வேர்க்கடலையில், நார்ச்சத்து அடங்கியுள்ளது. ஆண்டி- ஆக்ஸிடண்ட், கொழுப்பு, உணவு புரதம் ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ளது. இதில் உள்ள மோனோ மற்றும் பாலி நிறைவுறா கொழுப்பு ஆகிய இரண்டும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கிறது. அதிகப்படியான வேர்கடலையை சாப்பிட்டால், நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, உடல் எடை அதிகரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம் உப்பு போட்ட வேர்கடலை உண்ணும் போது முழுமையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. மேலும் கலோரி அளவு அதிகரிக்கிறது.உலர்ந்த திராட்சைகள்:

உலர்ந்த திராட்சைகள்:

உலர்ந்த திராட்சைகளை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் இதில் அதிகளவில் சக்கரை இருப்பதால், இதனை அளவுக்கு மீறி உண்ணும் போது உடல் எடை அதிகரிக்கலாம் மற்றும் இரத்தத்தில் குளோக்கோஸின் அளவை சக்கரை நோயாளிகளுக்கும் அதிகரிக்க செய்கிறது. பெரும்பாலும் இது சக்கரைக்கு பதிலாக இனிப்பான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, திராட்சை கீர், பழக்கூழ், சேமியா, ஷேக்குகள் போன்றவற்றில் சக்கரைக்கு பதிலாக சேர்க்கப்படுகிறது.நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

முதலில் இவைகலை சாப்பிடும் அளவில் கவனம் தேவை.
ஒரே வழியில் சாப்பிட வேண்டாம்.
சக்கரை / சுவையூட்டிகள் / உப்பு சேர்ந்த நட்ஸ்கள் அதிகப்படியான கலோரிகளை கொண்டிருக்கும் எனவே இது உடல் எடை அதிகரிப்பு மற்றும் வேறு சில பிரச்சனைகளை உருவாக்கும். சிறிதளவு நட்ஸை ஒட்ஸ் கஞ்சி, தயிர் அல்லது சூப் உடன் சேர்த்து உண்ணலாம்.

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...