Wednesday 30 August 2017

ஆரோக்கியமான பாஸ்ட் ஃபுட் பற்றித் தெரியுமா?

என்ன தான் உடல் நலத்திற்கு தீங்கானது என்று சொன்னாலும் ஜங்க் ஃபுட் மீதான மோகம் குறைந்த பாடில்லை. முதலில் இதற்கு ஜங்க் ஃபுட் என்று பெயர் வந்ததற்கு காரணமே அந்த உணவுகள் சத்துக்கள் குறைவாக இருப்பது தான்.
இதற்கு மாற்றாக ஏதேனும் இருக்கிறதா என்று தேடலாம். ஆனால் ஐஸ்க்ரீம் சாப்பிடும் இடத்தில் தயிர் சாப்பிடச் சொன்னால் எப்படியிருக்கும்? ஆரோக்கியமான முறையில் அதே நேரத்தில் சுவையான ஜங்க் ஃபுட் மாற்று உணவுகளின் பட்டியல் இங்கே... என்ன தான் மாற்றுவழியை கண்டுபிடித்தாலும் அளவுடன் சாப்பிடுவது தான் நன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.சிப்ஸ் :சிப்ஸ் : ஸ்நாக்ஸ் என்றவுடனேயே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இந்த சிப்ஸ் வகைகள் தான். முழுதாக எண்ணெயில் டீப் ஃப்ரை செய்தது உடலுக்கு நல்லதல்ல. அதுவும் சிப்ஸ் என்றால் பெரும்பாலும் உருளைக்கிழங்கை தான் பயன்படுத்துவார்கள். மாற்றாக உருளைக்கிழங்கைத் தவிர மற்ற காய்கறிகளை பயன்படுத்தலாம். டீப் ஃப்ரைக்கு பதிலாக பேக்கிங் செய்வது அல்லது ட்ரை ப்ரை செய்து சாப்பிடலாம். வித்யாசமான சுவை உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.சாக்லெட் :

சாக்லெட் :

சிலர் சாக்லெட் நல்லது என்றும் இன்னும் சிலர் சாக்லெட் தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும் சொல்வதுண்டு. நல்லது என்று சொல்வதற்கு காரணம், சாக்லெட் சாப்பிடுவதால் நாம் மகிழ்வாக இருப்பதற்கான ஹார்மோன்கள் தூண்டிவிடப்படுகிறது, தீங்கானது என்று சொல்வதற்கு காரணம் அதிலிருக்கும் கலோரிகள் தான்.
இதற்கு மாற்றாக, டார்க் சாக்லெட் உடன், நட்ஸ் அல்லது ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து சாப்பிடலாம். வொயிட் சாக்லெட்டிற்கு பதிலாக டார்க் சாக்லெட் எடுத்துக்கொள்ளுங்கள்.ஐஸ்க்ரீம் :

ஐஸ்க்ரீம் :

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு என்றால் கண்ணை மூடி ஐஸ்க்ரீமை தேர்ந்தெடுக்கலாம். ஐஸ்க்ரீம் உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று சொல்லப்படுவதற்கு காரணம் அதில் அதிக கலோரிகள் இருப்பது தான் காரணம்.
இதனை தவிர்க்க பாதிப்புகளின் வீரியத்தை குறைத்துக் கொள்ள சாக்கோ சிப்ஸ் பதிலாக வெண்ணிலா ஃப்லேவர் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.பீட்சா :

பீட்சா :

ஒற்றை பீஸ் பீட்சாவில் 285 கலோரி இருக்கிறது. ஒரு முழு பீட்சாவையும் சாப்பிட்டால் 1000 கலோரிகளுக்கும் அதிகமாக வரும்.
இதனை தவிர்க்க பீட்சா ஆர்டர் செய்யும் போது தின் க்ரஸ்ட் பீட்சாவை மட்டும் ஆர்டர் செய்திடுங்கள். இதனால் பீட்சாவிற்காக சேர்க்கப்படும் மாவு பொருள் குறைந்திடும்.கப் கேக் :

கப் கேக் :

மாவும் சாக்லேட்டும் அதிகப்படியான கலோரி இருப்பதால் இது உடல்நலத்திற்கு தீங்கானது என்று சொல்லப்படுகிறது. இதனை குறைக்க, சாக்லேட்டுக்கு பதிலாக ஓட்ஸ்,ப்ளூபெர்ரீஸ், நட்ஸ் போன்றவற்றை பயன்படுத்துங்கள். இது பசியையும் மட்டுப்படுத்தம்.ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் :

ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் :

கார்போஹைட்ரேட் இருக்கும் அதை விட எண்ணெயில் டீப் ஃப்ரை செய்திருப்பதால் ஜங்க் ஃபுட் பட்டியில் முதலிடத்தில் இருக்கும் உணவுகளில் ஒன்று இது. இதனை தவிர்க்க, ஸ்வீட் பொட்டோவை பயன்படுத்தலாம். ஏனென்றால் உருளைக்கிழங்கை விட இந்த ஸ்வீட் பொட்டோட்டோவில் அதிகப்படியான நியூட்ரிசியன்கள் கிடைக்கும்.
இதனை எண்ணெயில் பொறிப்பதற்கு பதிலாக பேக் செய்திடலாம் அல்லது ஏர் ஃப்ரையரில் ஃப்ரை செய்திடலாம்.பாஸ்தா : பாஸ்தா : முழு கோதுமை பாஸ்தா வாங்கி பயன்படுத்துங்கள். கூடுதலாக அதில் காளாண், தக்காளி,கேரட் என காய்களை பயன்படுத்துங்கள் அசைவு உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால், சிக்கன் அல்லது இறால் சேர்த்திடலாம். ப்ரட் சாப்பிடுபவர்கள் மல்ட்டி க்ரைன் ப்ரட் சாப்பிடலாம்.

எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஜெல்லியை எப்படி தயாரிக்கிறார்கள் எனத் தெரியுமா?

ஜெல்லி, ஒவ்வொரு குழந்தைக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகை ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கலாம் என்று விளம்பரப்படுத்தும் அளவிற்கு ஜெல்லியின் புகழ் பரவி கிடக்கிறது.
ஆனால், ஜெல்லிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதை எப்படி தயாரிக்கின்றன என பல்வேறு சமூக வலைத்தளங்களில், யூடியுப் முதலான காணொளித் தளங்களிலும்பல்வேறு வகையான தயாரிப்பு முறைகளை காண்பிக்கின்றன. குறிப்பாக பன்றிகளின் கொழுப்பை வைத்து ஜெல்லி தயாரிக்கும் ஒரு முறை மிகப் பிரபலமாக பார்க்கப் பட்ட காணொளி ஆகும்.
இது உண்மை எனில் நமது குழந்தைகளுக்கு நாம் பன்றிகளின் கொழுப்பையா கொடுத்து வந்திருக்கிறோம் என்றால். அதற்கு விடை ஆம் மற்றும்இல்லை என இரண்டையுமே கூறலாம். சில நிறுவனங்கள் தாம் ஜெல்லி தயாரிக்க பன்றிகளின் கொழுப்பை உபயோகிப்பதில்லை எனவும் கூறுகின்றன.
நமக்கு எதுக்கு இந்த குழப்பம் எல்லாம்?
சரி அப்போது எவ்வாறு குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவது. அதற்கு நமது தமிழ் உணவு வகைகளிலேயே ஒரு மாற்று உள்ளது. ஆம், ஜெல்லிக்கு மாற்று நமது
முன்னோர்கள் பரவலாக பயன்படுத்திய "பாதாம் பிசின்".
"பாதாம் பிசின்" என்பது ஆங்கிலத்தில் அல்மோன்ட் கம் (Almond Gum) என அழைக்கப் படுகிறது. இது பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை பசை. இது பயன்பாட்டிற்கு முன் ஒரு காய்ந்த பசை போல் இருக்கும். அதை தண்ணீர் அல்லது பால் போன்ற திரவத்தில், சர்க்கரை, சிறிது ஏலக்காய் தூள் மற்றும் தேவையென்றால்நிறத்திற்காக கேசரி தூள்.
இவை அனைத்தையும் நன்கு கலந்து ஒரு 7-8 மணி நேரங்கள் ஊற வைத்தால் பளபளப்பான ஒரு திடமான அல்லது ஜெல்லி போன்ற கெட்டியான ஒரு வடிவில் அது மாறிவிடும். பாதாம் பிசின் தமிழ் நாட்டில் பிரபலமான ஒரு குளிர் பானம் தயாரிப்பதற்கு பயன் படுகிறது. அதை இந்த கட்டுரையின் கடைசியில்குறிப்பிட்டு இருக்கிறோம்.
பாதாம் பிசினை ஜெல்லியின் மாற்றாக மட்டும் நாம் இங்கு பார்க்கவில்லை. பாதாம் பிசின் நமது உடல் நலத்திற்கும் நல்லது.
இந்தியா போன்ற ஒரு நாடு, கோடை காலங்களில் தாங்க முடியாத சூடாக இருக்கும். அதனை சமாளிக்க நம் உடலை குளிர்ச்சிக் கொள்ள உதவும் விஷயங்களைத்தேடுகிறோம். அதற்கு தற்போதைய காலங்களில் நாம் தேர்தெடுத்து இருக்கும் தனியார் குளிர் பானங்களால் உண்மையில் நமக்கு நன்மை கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.Things you should know about almond gumவெற்று கலோரிகள் கொண்ட அவ்வகை தனியார் குளிர் பானங்கள் நமக்கு, நமது உடல் குளிர்ச்சி அடைந்த ஒரு உணர்வை கொடுத்தாலும்உண்மையில் அவை நமது உடலை குளிர்விப்பது இல்லை.
இது குளிரூட்டப்பட்ட தனியார் குளிர் பானங்களின் ஒரு அனுகூலம் அற்ற விஷயமாகும் . ஆனால் நமது முன்னோர்கள் அதிகமாக உபயோகித்த பாதாம் பிசின் ஒரு சிறந்த குளிரூட்டும் குணங்களைக் கொண்டு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?
ஆம், பாதாம் பிசின் ஒரு இயற்கையான குளிர்ச்சி கொண்ட மற்றும் ஜெல்லி போன்ற குணங்களை வழங்குகிறது. நமது உடலை குளிரூட்டும் ஒரு சிறந்த உணவாக இது இருக்கிறது.
பாதாம் பிசினின் குணங்கள்:
  • பாதாம் பிசின் உடலுக்கு குளிரூட்ட பயன் படுகிறது.
  • வயிற்று எரிச்சலுக்கு மிக நல்லது.
  • விலை மலிவானது மற்றும் இயற்கையானது.
  • உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் போன்றவை குணமாகும்.
  • பாதாம் பிசின் கொண்டு அல்சர் முதலான வயிறு சம்மந்தப்பட்டநோய்களை குணப்படுத்தலாம்.
  • பேதிக்கு சிறந்த மருந்தாக பயன் படுகிறது.
  • கொழுப்பை குறைக்க உதவுகிறது.Things you should know about almond gum
  • வட இந்தியாவில் இது பொதுவாக கர்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது எலும்புகளை பலப்படுத்தி உடலுக்கு சக்தி கொடுக்கிறது.
  • இயற்கையான உணவு என்பதால் இதில் செயற்கையான நிறங்கள் ஏதும் இல்லை, இதனால் இவை குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப் படுகிறது.
  • பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இது உடல் எடையை கூட்ட வல்லது.
  • உடல் எடையை அதிகரிப்பதால் எடை தூங்குபவர்கள்(weight lifters ) இதனை உபயோகிப்பர். 
  • உணவிற்கு பிறகு உண்ணப்படும் இனிப்புகளிலும் குளிர்பங்களிலும் இதனை சேர்ப்பதால் அசிடிட்டி குறைகிறது.
  • பாதாம் பிசின் அதிக குளிர்ச்சி அடைய செய்யும் ஒரு உணவுப் பொருள் என்பதால். அவற்றை ஆஸ்துமா, சைனஸ், சளி தொல்லை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
  • இப்போது நாம் முன்பு குறிப்பிட்ட, பாதாம் பிசின் கொண்டு தயாரிக்கப் படும் தமிழகத்தில் மிகவும் பிரபலமான பானம், "ஜிகர்தண்டா".

விட்டமின்களும் அவை அதிகம் இருக்கும் உணவுகளும் - ஓர் பட்டியல்!!

நமது உடல் இயங்குவதற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. இவை நாம் தினசரி சாப்பிடும் உணவுகளில் நிறைந்து காணப்படுகின்றன.Food that are rich in vitamins எந்தெந்த ஊட்டச்சத்துகள் என்னென்ன செயலுக்கு இன்றியமையாதது என்பதை நமது முந்தய பதிவில் பார்த்தோம். எந்த உணவில் எந்த ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.வைட்டமின் ஏ :

வைட்டமின் ஏ :

வைட்டமின் ஏ சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ வின் தினசரிஉட்கொள்ளல் அளவில் 561% வேக வாய்த்த இந்த கிழங்கில் உள்ளது. கீரை, மீன் ,முட்டை,பால், காரட் போன்றவை இந்த வைட்டமின் அதிகமுள்ள உணவுகள்.தியாமின்(வைட்டமின் B1):

தியாமின்(வைட்டமின் B1):

உலர்ந்த ஈஸ்ட்டில் இந்த சத்து அதிகமாக உள்ளது. 100கிமஈஸ்ட்டில்11mg அளவு தியாமின் சத்து உள்ளது. பைன் கொட்டைகள் மற்றும் சோயா பீன்ஸில் இவை அதிகம் உள்ளன. ரிபோபிளவின்(வைட்டமின் B2) :

ரிபோபிளவின்(வைட்டமின் B2) :

மாட்டிறைச்சி கல்லீரலில் அதிக அளவு ரிபோஃபிளேவின் உள்ளது. வலுவூட்டப்பட்ட தானியங்களில் கூட அதிக அளவில் இந்த சத்துகள் கிடைக்கிறது.. நியாசின்(வைட்டமின் B3):நியாசின்(வைட்டமின் B3): உலர்ந்த ஈஸ்ட்டில் நியாசின் நிறைந்து காணப்படுகிறது. வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை வெண்ணை போன்றவற்றையும் எடுத்து கொள்ளலாம். ஒரு கப் பச்சை வேர்க்கடலையில் 17.6mg சத்து உள்ளது. இது தினசரி உட்கொள்ளலில் 100% பூர்த்தி செய்கிறது. மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியில் நியாசின் அதிக அளவிலுள்ளது. வைட்டமின் B6:வைட்டமின் B6: மீன், மாட்டிறைச்சி கல்லீரல் மற்றும் கோழி உணவுகளில் இந்த வகை வைட்டமின்கள் காணப்படுகின்றன. இவற்றைக் காட்டிலும் அதிகமாக வைட்டமின் B6 கொண்டைக்கடலையில் இருக்கிறது. வைட்டமின்B6 ன் தினசரி உட்கொள்ளல் அளவில் 55% 1 கப் கொண்டைக்கடலையில் உள்ளது.
வைட்டமின் B12 :வைட்டமின் B12 : ` மாட்டிறைச்சி கல்லீரல்,சால்மன், ட்யூனா வகை மீன் உணவுகளில் அதிகம் உள்ளது. 1 துண்டு மாட்டிறைச்சியில் 48mcg வைட்டமின் பி12 உள்ளது. இது தினசரி உட்கொள்ளலில் 800% ஆகும்.வைட்டமின் C:வைட்டமின் C: பொதுவாக வைட்டமின் C என்றவுடன் சிட்ரஸ் உணவுகள் தான் பலரின் நினைவுக்கு வரும். ஆனால் சிவப்பு குடை மிளகாயில் தான் அதிக அளவிலான வைட்டமின்C சத்து உள்ளது. சிவப்பு குடை மிளகாயில் 95mg/serving வைட்டமின் C சத்து உள்ளது .அதுவே ஆரஞ்சு பழச்சாறில் 93mg /serving ஆக உள்ளது.இது தவிர கிவி ,ப்ரக்கோலி,முலை விட்ட தானியங்கள் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.வைட்டமின் D :வைட்டமின் D : கொழுப்பு அதிகமுள்ள மீன்களான சால்மன், கானாங்கெளுத்தி போன்றவற்றில் வைட்டமின் D அதிகமாக உள்ளது. மீன் எண்ணையில் அதிகபட்ச வைட்டமின் D உள்ளது. இது தினசரி உட்கொள்ளலில் 142% உள்ளது.பெரும்பாலான மக்கள் பால், காலை உணவு தானியங்கள், தயிர் மற்றும் ஆரஞ்சு சாறு போன்ற பலமான உணவுகள் வழியாக வைட்டமின் D ஐ எடுத்து கொள்கின்றனர்.வைட்டமின் E :வைட்டமின் E : கோதுமை எண்ணையில் மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவு வைட்டமின் E சத்து உள்ளது. இது 20.3mg /serving . தினசரி உட்கொள்ளல் அளவில் இது 100% ஆகும். ஆனால் பலர் சூரியகாந்தி விதைகளையும் பாதாம் கொட்டைகளையும் எடுத்து கொள்கின்றனர்.வைட்டமின் K :வைட்டமின் K : பச்சை இலைகளை கொண்ட காய்கறிகளில் இந்த சத்து அதிகமாக உள்ளது. இது ஃபில்லோகுவினோன் என்றும் அழைக்கப்படுகிறது. கீரை ,நூக்கல் கீரை, பீட் ரூட் கீரை, கடுகு போன்ற உணவுகளில் இந்த சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த வைட்டமின்கள் அல்லாத பல ஊட்டச்சத்துகள் நம் உடலுக்கு வலு சேர்க்கின்றன. இவைகளை பற்றி நமது அடுத்த பதிவில் காணலாம்.

சர்க்கரை வியாதியை தடுக்கும் காளானை சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்!

இப்போது பெரும்பாலானோரின் விருப்பமான உணவாக மாறிவருகிறது காளாண். இவை மிகுந்த சுவையுள்ளதாகவும், சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு, ஏராளமான மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது. இயற்கையாகவே வளரும் காளான்களில் சில விஷத்தன்மை கொண்டதும் இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் காளாண் வகைகளில் சுமார் எட்டு வகைகளை தான் நாம் உணவாக எடுத்துக் கொள்கிறோம்.சத்துக்கள் :

சத்துக்கள் :

காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இதயம் :

இதயம் :

காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் உள்ளதால் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.ரத்தம் :

ரத்தம் :

காளானில் உள்ள லென்டிசைன், எரிடாடின் எனும் வேதிப்பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தை சுத்தமாக்கும்.குழந்தைகளுக்கு :

குழந்தைகளுக்கு :

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.உடல் தேற :

உடல் தேற :

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் :

காளானில் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்கிறது. அதே சமயத்தில் குறைந்தளவு தான் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதிலிருக்கும் ஃபைபர் மற்றும் சில என்சைம்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவிடுகிறது. அதே நேரத்தில் இதிலிருக்கும் ப்ரோட்டீனும் கொலஸ்ட்ராலை கரைக்க உதவிடும்.ரத்த சோகை :

ரத்த சோகை :

ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சோர்வு, தலைவலி, ஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். அவர்கள் காளான் சாப்பிடலாம். காளானில் இரும்புச் சத்து அதிகமுண்டு.சர்க்கரை நோய் : சர்க்கரை நோய் : காளானில் கொழுப்பு இல்லை,கார்போஹைட்ரேட்டும் இல்லை. இதில் அதிகளவு ப்ரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அதைவிட அதில் நிறைய தண்ணீர் மற்றும் ஃபைபர் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட காளாணில் இயற்கையாகவே இன்சுலின் இருக்கிறது. இவை உணவுகளில் இருந்து கிடைக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்திடும்.

உடல் எடையை குறைக்க வந்தாச்சு ஒயிட் டீ!! அதனை எப்படி தயாரிப்பது?

பல வகையான டீக்களை குடித்திருப்போம். வொயிட் டீ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?எந்த வகையில் பதப்படுத்தப்படாத டீ இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் டீயைத் தான் நாம் வொயிட் டீ என்கிறோம்.All about White tea and its proven benefits
இந்த டீயை தயாரிக்க குருத்து இலைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இதனுடைய சுவையே தனியாக தெரியும். ப்ளாக் டீ,க்ரீன் டீயை தொடர்ந்து தற்போது களமிறக்கப்பட்டிருக்கும் வொயிட் டீ குறித்து முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.வொயிட் டீ தயாரிக்கும் முறை :

வொயிட் டீ தயாரிக்கும் முறை :

மற்ற டீக்களை தயாரிப்பது போன்றே இது எளிதானது. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைக்க வேண்டும், பின்னர் அதில் டீ இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவு தான் வொயிட் டீ தயார் வேண்டுமானால் அதில் தேன் கலந்து கொள்ளலாம்.
சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து அது ஆறிய பிறகு அதில் டீ இலைகளை போடுவார்கள் இது சிறந்த பலனை கொடுக்காது. டீ இலைகள் அதிக நேரம் இருந்தால் அதன் சாறு தண்ணீரில் இறங்கிடும் அப்போது தான் அதன் பலன் உங்களுக்கு கிடைக்கும்.காஃபைன் :

காஃபைன் :

ஒரு கப் வொயிட் டீயில் 28 கிராம் காஃபைன் தான் இருக்கிறது.மற்ற பானங்களை ஒப்பிடுகையில் இதன் காஃபைன் அளவு மிகவும் குறைவானது.ஒரு கப் காபியில் 95 கிராம் காஃபைன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது நம் எனர்ஜியை அதிகப்படுத்தும் அதே நேரத்தில் தொடர்ந்து குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டாது.நியூட்ரிஷியன் :

நியூட்ரிஷியன் :

வொயிட் டீயில் ஏராளமான நியூட்ரிஷியன்கள் நிறைந்திருக்கிறது. டானின்ஸ்,ஃப்ளூராய்ட்,ஃப்ளேவனாய்ட்,கேட்சின்ஸ்,பாலிபினாய்ல் போன்றவையும் அடக்கம்.இதனை குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் ஏற்படும்.ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் :

ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் :

இதில் இருக்கும் பாலிஃபினால் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் ஏஜென்ட்டாக செயல்படும். அதோடு இந்த டீயில் இருக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு உடலில் உள்ள டாக்ஸின்களை நீக்கிடும்.இதனால் உடலில் உள்ள செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.சருமப் பாதுகாப்பு :

சருமப் பாதுகாப்பு :

ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புபவர்கள் வொயிட் டீ குடிக்கலாம். இதில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் அவை நம் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கச் செய்திடும். அதே நேரத்தில் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிலிருந்து நம் சருமத்தை பாதுகாத்திட முடியும்.பற்கள் : பற்கள் : வொயிட் டீ குடிப்பது பல்லுக்கும் மிகவும் நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் பற்களில் ஏற்படும் தொற்றை தவிர்க்கவும் அதே நேரத்தில் பற்களை தாக்கும் பாக்டீரியாக்களை அளிக்கவும் செய்திடும். இதில் இருக்கும் ப்ளூரைட் பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும்.புற்றுநோய் :புற்றுநோய் : க்ரீன் டீயினைப் போலவே வொயிட் டீயும் நுரையிரல் புற்றுநோய் வராமல் தடுத்திடும்.இதில் இருக்கும் கீமோ ப்ரிவன்ட்டிவ் ஏஜென்ட்டினால் புற்று நோய் வருவதற்கு முன்னரே அதனை வராமல் தடுக்க முடியும்.
சர்க்கரை நோய் :சர்க்கரை நோய் : சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த டீ குடிப்பதால் அவர்கள் உடலின் சர்க்கரை அளவினை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும். அதே நேரத்தில் அடிக்கடி தாகமெடுப்பது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் வொயிட் டீ குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதயம் :இதயம் : இதில் இருக்கும் ஃப்ளேவனாய்ட் இதயம் தொடர்பான பிரச்சனைகளை வராமல் தடுத்திடும். ப்ளேவனாய்ட் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்
நோய் எதிர்ப்பு :நோய் எதிர்ப்பு : நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் நமக்கு நோய்த்தொற்று ஏற்ப்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதில் ஏராளமான ஆன்ட்டி பாக்டீரியல் ப்ராப்பர்டீஸ் இருக்கிறது இதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வொயிட் டீ தொடர்ந்து குடித்து வர பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை காத்திடும்.
எடையை குறைக்க :எடையை குறைக்க : உடலுழைப்பு இல்லாத வேலை, திட்டமிடாத உணவுகளால் தான் பெரும்பாலும் எடை அதிகரிக்கிறது.தீவிரமாக டயட் பின்பற்ற முடியவில்லை என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த டீயை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இது நம் உடலில் உள்ள அப்டிபோசைட்ஸ் எனப்படுகின்ற கொழுப்பு செல்களை அழிக்க உதவிடும். இந்த டீ குடிக்கிறோம் என்று அளவில்லாமல் உணவு எடுத்தால் அது ஆபத்தைத் தான் ஏற்படுத்தும்.

மிளகாய் அதிகமாக சாப்பிட்டால், இது எல்லாம் தான் நடக்கும்!

காரசாரமாக சாப்பிட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகவும் இருக்கும். அதுவும் நமது ஊர்ப்பகுதியினர் காரசாரமாகவே சாப்பிட்டு பழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். மிளகாய் உங்களது மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கிறது. அதற்காக இதனை அதிகமாக எடுத்துக்கொண்டால் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்த பகுதியில் மிளகாயை அதிகமாக எடுத்துக்கொள்வதால் உண்டாகும் தீமைகள் பற்றி காணலாம்.
நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று அல்சர் போன்றவை இருந்தும் கூட, நீங்கள் மிளகாயை அதிகளவில் எடுத்துக்கொண்டால், அது பிரச்சனையை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். நீங்கள் புளிப்பு ஏப்பம் போன்றவற்றை உணர்ந்தால், மிளகாய் சாப்பிடுவதை கைவிட்டுவிட்டு, தயிர் மற்றும் மோரை அதிகமாக உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

மிகவும் காரணமான மிளகாய் உங்களது வயிற்றில் படும்போது அது மற்ற உணவுகளை வேகமாக நகர்த்தி செல்கிறது. மிளகாயில் உள்ள கேப்சசைன் ஒரு மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதனால் உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

உதடுகளில் எரிச்சல்

மிளகாய் உங்களது கண்களில் பட்டால் எப்படி எரியுமோ அதே போல உதடுகளில் படும் போதும் எரிச்சலை உண்டாக்கும். நீங்கள் சாப்பிடும் போது மிளகாய் உங்களது உதடுகளில் பட்டு கடும் எரிச்சலை உண்டாக்க கூடும். எனவே காரணமான பொருட்களை சாப்பிடும் முன்னர் லிப் பாம் போட்டுக்கொள்ளலாம்.சுவை உணர்தல்சுவை உணர்தல் காரமாக சாப்பிடும் போது நாக்கில் உள்ள சுவை உணர் திறன் குறைந்துவிடுகிறது. எனவே அதிகமாக மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளுங்கள்.

வியர்வை அதிகரிக்கும் மிளகாய் அதிகமாக சாப்பிட்டால், உங்களுக்கு அதிகளவில் வியர்வை வெளியேறும். கேப்சசைன் உங்களது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் உங்களது உடலில் அதிக வியற்வை வெளியேறும். இதன் காரணமாக உடல் தூர்நாற்றமும் ஏற்படும்.

சைனஸ் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான எளிய வழிகள்!!

மூக்கின் இரு பக்கத்திலும் இருக்கும் காற்று நிரப்பப்பட்ட குழிகள் அல்லது துவாரங்கள் தான் சைனஸ் என்பதாகும். ஒவ்வாமை, குளிர் அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக, இவை சில நேரங்களில் அடைபட்டு தொற்று ஏற்படலாம்.
இது தலைவலி, குறட்டை அல்லது சுவாசத்தில் சிரமம் போன்ற பல்வேறு சிக்கல்களை உருவாக்கலாம். நாட்பட்ட சைனஸ் தொந்தரவு மூளை காய்ச்சலுக்கும் வழி வகுக்கலாம்.
3 வகையான சைனஸ் தொந்தரவுகள் உள்ளன. முதல் வகை சைனஸ் 4 வாரங்களுக்கு குறைவாக நீடிக்கும். இரண்டாம் வகை 4 - 8 வாரங்கள் நீடிக்கும்.
மூன்றாம் வகை 8 வாரங்களுக்கு அதிகமாக இருக்கும். இவ்வகையில் வீக்கங்கள் தொடர்ந்து பலமுறை ஏற்படும்.
சைனஸ் குறியீட்டை அதிகரிக்கும் சில உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். அவற்றுள் வறுத்த உணவுகள், அரிசி, இறைச்சி மற்றும் வலுவான மசாலா போன்றவை அடங்கும்.
Home remedies to treat sinusitis வைட்டமின் ஏ நிறைந்த உணவு உட்கொள்ளல் சைனஸ் தொற்றுக்கு எதிராக ஒரு வலுவான பாதுகாப்பு உருவாக்க உதவும். பால் பொருட்கள், குறிப்பாக சீஸ், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும், சாக்லேட், சர்க்கரை மற்றும் ஈஸ்ட் கொண்ட உணவை அறவே நீக்க வேண்டும். அவை சைனஸில் அதிகமாக சளி உற்பத்தியை தூண்டும். குளிர் பானங்கள் ஒரு பெரிய குட் பை . குளிர் திரவங்களை உட்கொள்வது மூக்கடைப்பை உண்டாக்கி மூக்கில் சளி வருவதை தடுக்கும்.
இதற்கு வீட்டிலேயே சில எளிய முறைகளை பின்பற்றி உடனடி நிவாரணம் அடையலாம்.1.நீர் சத்து

1.நீர் சத்து

தண்ணீர், தேநீர்,சர்க்கரை மற்றும் ஐஸ் இல்லாத பழச்சாறு போன்றவை நம் உடலை நீர்ச்சத்துடன் வைத்து கொள்ள உதவும். இவைகள் சளியை கெட்டியாக்காமல் மென்மையாக இருக்க வைக்கும்.
இதன் மூலம் சைனஸ் தொந்தரவுக்கு ஒரு நிவாரணம் கிடைக்கும். நீர் வறட்சி ஏற்படுத்தக் கூடிய மது அருந்துதல், காஃபின் மற்றும் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.2. காரமான உணவுகள்:

2. காரமான உணவுகள்:

காய்ந்த மிளகாய் பாக்டீரியாக்களைஎதிர்த்து வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. இதனை உட்கொள்ளும் போது கெட்டியான சளி உடைக்கப்பட்டு வெளி வரும் . ஆப்பிள் சீடர் வினிகர் ,மற்றும் எலுமிச்சை சாறுடன் , சிறிது முள்ளங்கி சேர்த்து அருந்தும் போது இந்த கலவை சளியை வெளியேற்றும்.
புதிதாக துருவிய முள்ளங்கியை சில நிமிடங்கள் வாயில் வைத்திருக்க வேண்டும். அதன் சுவை மறைந்த வுடன் விழுங்கி விடுங்கள்.3. ஆவி பிடித்தல்:

3. ஆவி பிடித்தல்:

ஆவி பிடிப்பது ஒரு சிறந்த நிவாரணியாகும். நன்றாக கொதிக்கும் தண்ணீரில் 3 துளி ரோஸ்மேரி எண்ணெய்,3 துளி புதினா சாறு மற்றும் 2 துளி யூக்கலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். உடல்முழுவதையும் நன்றாகப்போர்த்தி கொண்டு அந்த கொதி நீரில் உங்கள் முகத்தை நன்றாக காண்பியுங்கள். அந்த ஆவியை நன்றாக நுகரும் போது மூக்கின் துவாரங்கள் நன்றாக திறக்கப்படும். மூச்சை இழுத்து விடுங்கள். மூக்கடைப்பு விலகி சீரான சுவாசம் பெறுவீர்கள்.4. மஞ்சள் மற்றும் இஞ்சி வேர் :4. மஞ்சள் மற்றும் இஞ்சி வேர் : மஞ்சள் ஒரு சிறந்த மருந்தாக பயன்படும் உணவு பொருள். மஞ்சள் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் அழற்சியை கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது. இதனை இஞ்சியுடன் சேர்த்து தேநீரில் கலந்து பருக வேண்டும். இதன் மூலம் சளி மென்மையாகி மூக்கில் இருந்து வெளி வரும். உடனடியாக நீங்க சைனஸிலிருந்து விடுபடுவீர்கள். இஞ்சி சாறில் தேன் கலந்து ஒரு நாளில் 2-3 முறை குடிப்பதும் ஒரு சிறந்த தீர்வாகும் என்று ‘The Complete Book of Ayurvedic Home Remedies, பரிந்துரைக்கிறது. 5.ஆப்பிள் சீடர் வினிகர்:5.ஆப்பிள் சீடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் பல ஆரோக்கிய நலன்கள் கொண்ட ஒரு அற்புதமான இயற்கை பொருளாக உள்ளது. ஒரு கப் சூடான தண்ணீர் அல்லது தேநீரில், மூன்று தேக்கரண்டி வடிகட்டப்படாத ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்கவும். சளி மெலிதாக கரைந்து வருவதற்கு இது உதவும். சுவைக்கு எலுமிச்சை மற்றும் தேனுடன் சேர்த்தும் அருந்தலாம் . வெறும் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு நாளில் 3முறை 1தேக்கரண்டி சுவைப்பதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.6. சூப் :6. சூப் : சூப் அருந்துவதால் சளியினால் ஏற்படும் அடைப்புகள் குறைகின்றன என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.அது சிக்கன் சூப் அல்லது காய் கறி சூப் எதுவாக இருந்தாலும் அதனுடன் சில மூலிகைகளை கலந்து பருகும் போது உடலுக்கு நன்மை பயக்கின்றன . ஆவி பிடித்த பிறகு ஒரு நல்ல கார சாரமான சூப் பருகுவது சைனஸுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.7. உப்பு கரைசல்:7. உப்பு கரைசல்: நீங்கள் ½ கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ½ டீஸ்பூன் உப்பு சேர்த்து கரைத்து அதை ஒரு பாட்டிலில் ஊற்றவும்; உங்கள் தலையைச் சாய்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாசியில் 5 சொட்டு கரைசலை ஊற்றவும். அது மற்ற மூக்கின் ஓட்டை வழியாக வெளியேறும் . மற்றொரு துவாரத்திலும் இதை செய்யுங்கள். இது உங்கள் சைனஸை உறிஞ்சி, பாக்டீரியா மற்றும் எரிச்சலூட்டும் துகள்களை அகற்றும்.

தினமும் ஆஸ்பிரின் உபயோகிப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இதை படிங்க...

http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851 பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் ...