அந்த பொருளின் ஆயுட் கால அளவை அறிந்து நாம் அதனை வாங்கி பயன்படுத்துகிறோம்.ஒரு பதப்படுத்தப்பட்ட உணவில் எந்த ஒரு பதனப்பொருளும் சேர்க்காமல் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த பொருளின் ஆயுள் இருக்காது. இந்த பதனப்பொருள் இரசாயனத்தால் உருவாவது. இது உடலுக்கு கெடுதலும் ஆகும்



ஹிமாலயன் உப்பு அல்லது கடல் உப்பு : நீண்ட காலமாக உப்பு ஒரு பதனப்பொருளாக பார்க்கப்படுகிறது. அதிலும் ஹிமாலயன் உப்பு மிக சிறந்தது. உங்கள் உணவில் ஒரு சிட்டிகை ஹிமாலயன் உப்பு சேர்ப்பதால் உணவை ஆரோக்கியமான முறையில் பாதுகாக்கலாம் .காய்கறி கலவை, சூப், டிப் என எல்லாவற்றிலும் இதனை பயன்படுத்தலாம்.
மசாலா பொருட்கள்: மிளகாய் , கடுகு, ஹாட் சாஸ் போன்றவை இயற்கை பதனப்பொருளாக இருக்கிறது. கடுகு மற்றும் ஹாட் சாஸில் சில சதவிகிதம் வினிகர் உள்ளது. மசாலா பொருட்கள் இயற்கையாகவே பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உடையது. ஆகையால் இதை உணவில் சேர்க்கும்போது பல மணி நேரங்கள் உணவின் சுவை கெடாமல் பாதுகாக்கிறது. இனிப்புகளில் 1 சிட்டிகை மிளகாய் சேர்க்கும்போது , அதன் மிதமான காரத்தன்மை நீண்ட நேரம் அந்த உணவை பாதுகாக்கிறது.


No comments:
Post a Comment